அவரது அனுமதி எடுத்து பிறகு பிள்ளையாரை வணங்கிவிட்டு , கூப்பிட்ட சொல் தடுத்தவர் , கன்னி விநாயகர்,பால் வண்ண நாதர்,மாடன், மாடத்தி ,மாடசாமி , வீரபத்திரர் , சின்னய்யன் , ஐவர ராஜா , திரௌபதி , லாட சன்யாசி , தவசு தம்பிரான், கர்த வீர்யர்ஜுனன் ,தலைகவர் உடைய சாஸ்த, இருளப்பசாமி ,குருகிட்டன் சாமி ,பேச்சி , குலபேட்சி, வன பேச்சி , கடலோ பேச்சி , புனமாலை பேச்சி , வனதுர்கா , சப்த கணியர்கள் , காலபைரவர் , சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை வணங்கிவிட்டு பின்பு கருஞ்சிவலிங்கம்,ராஜாராஜேஸ்வரி ,பிரகதீஸ்வரன்(பெரியசாமி அய்யனார்),பூரணி,புஷ்கலை வணங்க வேண்டும்.
தங்கள் ஆசை நிறைவேறும் முன் அல்லது பிறகு இந்த கோவிலில் ஒரு மணி கட்டி பிராத்தனை செய்வார்கள்.ஆயிரக்கணக்கான மணிகள் இந்த கோவிலில் காணப்படும்.இந்த கோவிலில் பசுக்கள், குதிரைகள் , யானை சிலைகள் பெரிய அளவில் உள்ளன .இந்த கோவிலின் ஸ்தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.இந்த கோயில்கள் பின்னால் காணப்படுகிறது.இந்த ஆலயத்தில் இரண்டு மிகவும் கவர்ச்சிகரமான வெள்ளை குதிரை சிலைகள் உள்ளன.
சபரி மலை செல்லும் பல பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வணங்கி செல்வார்கள்.